தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவாதம் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் சமூகம் மற்றும் அரசியலில் எழுந்துள்ள விவாதம் காரணமாக, அது பற்றிய புரிதலை மக்களுக்கு வழங்குவதற்காக இந்த விவாதம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
